இலங்கையில் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில்
மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை சுங்க திணைக்களத்தின் விபரங்களுக்கு அமைய தெரியவந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் பல்வேறு பிரதேசங்களுக்கு பொருட்களை விநியோகித்தமைக்கான தரவு விபரங்கள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் மூன்று மாதங்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் சந்தையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில இடங்களில் கிடைக்கும் பொருட்கள் பல காரணங்களின் அடிப்படையில் வேறு இடங்களில் கிடைப்பதில்லை எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சில பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்தாலோ அல்லது விற்பனை நிபந்தனை போன்ற தேவையற்ற பிரயோசனங்களை பெற வர்த்தகர்கள் முயற்சித்தால், அப்படியானவர்கள் சட்டத்திற்கு முன் கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் நிதியமைச்சர் எச்சரித்துள்ளார்.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri