கொரிய வேலைவாய்ப்பிற்குச் செல்வோரின் தொகை அதிகரிப்பு
அண்மைக்காலமாக கொரிய வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் முதல் 1,678 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காகச் சென்றுள்ளனர்.
வேலைவாய்ப்புப் பணியகம்
தென் கொரியா வேலைவாய்ப்புக்காக முதன்முறையாக 1398 பேர் சென்றுள்ளதாகவும், 280 பேர் சேவைக் காலம் முடிந்து அதே இடத்திற்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1490 பேர் உற்பத்தித் துறைக்காகவும், 188 பேர் மீன்பிடித் துறைக்காகவும் சென்றுள்ளதாக வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த குழுவில் 1,662 ஆண்களும் 16 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள வேலைவாய்ப்புப் பணியகம், இந்த ஆண்டு 6,500 இலங்கையர்களை தென் கொரியாவில் பணிக்கு அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
