சீன உள்விவகாரங்களில் ஐ.நா தலையீடு செய்யக் கூடாது: இலங்கை
சீன உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்யக்கூடாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 50ம் அமர்வுகளில் பங்குபற்றியுள்ள இலங்கை பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பக்கச்சார்பற்ற வகையிலும், ஆக்கபூர்வமாக பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பாச்செலட் சீனாவிற்கு மேற்கொண்ட விஜயம் வரவேற்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரே சீனா என்ற கொள்கையை எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கை ஆதரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மெய்யான பேச்சுவார்த்தைகளின் மூலம் அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகளை எட்ட முடியும் என இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ண அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.