வெளிநாடுகளில் அனாதரவாக தவிக்கும் இலங்கையர்கள்
ஆங்கில மொழியை கையாள முடியாமல் வெளிநாடுகளிலும், விமான நிலையங்களிலும் பல இலங்கையர்கள் அனாதரவாக இருக்கும் நேரங்களும் உண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுமு் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களில் தவிக்கும் இலங்கையர்கள்
இதேவேளை, உலகக்கிண்ண கோப்பைக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணிக்கு ஆங்கிலம் பேச தெரியாவிட்டால் என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam