திருகோணமலையில் திருட்டு சம்பவம் தொடர்பில் தந்தை முறைப்பாடு - மகன் எடுத்த விபரீத முடிவு
திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மோதிரம் திருடப்பட்டமை தொடர்பில் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மகன் நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வீட்டில் வைக்கப்பட்டிருந்த மோதிரம் காணாமல்போனமை தொடர்பில் பெற்றோர் மகனிடம் வினவியதாகவும்,தான் எடுக்கவில்லை என கூறியதையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மகன் நஞ்சருந்தியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நஞ்சருந்தியவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனவும், இராணுவத்தில் இருந்து இடைவிலகிய நிலையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனையடுத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த 50,000 ரூபாய் பெறுமதியான மோதிரத்தை திருடியமையால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
குறித்த இளைஞர் நஞ்சருந்தி மயக்கமற்ற நிலையில், அயலவர்களின் உதவியுடன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் வைத்தியசாலையில் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,திருகோணமலை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமையினால் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
