சீனாவின் சேதனப் பசளை விவகாரம்: இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்
சீனாவின் அனைத்து சேதனப்பசளைகளும் நிராகரிக்கப்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட சேதன பசளைகளின் முதல் தொகுதியே தொற்றுக்காரணமாக நிராகாிக்கப்பட்டது.
எனினும் சீனாவின் அனைத்து சேதனப்பசளைகளும் நிராகரிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த சீன நிறுவனத்தை நிராகாிக்கவில்லை என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளா் அஜந்த டி சில்வா தொிவித்துள்ளார்.
சீனாவின் கிங்டோவோ சீவின் நிறுவன பசளை மாதிரிகளின் முதல் தொகுதி ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது. எனினும் இரண்டாவது தொகுதி தொற்றற்ற பசளையாக இருக்குமானால் அந்த தொகுதியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று விவசாயத்திணைக்களப் பணிப்பாளர் தொிவித்துள்ளார்.
முன்னதாக சீனாவின் சேதனப்பசளைகள் தொடர்பில் சீனத் துாதரகத்துக்கும் இலங்கையின்
அதிகாரிகளுக்கும் இடையில் கருத்தாடல்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
