எரிபொருள் கியூஆர் குறியீடு மோசடி! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் கியூஆர் (QR) அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நெருக்கடியாக இக்காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும் பேராசிரியர் வசந்த அதுகோரல கூறினார்.
எரிபொருள் கியூஆர் குறியீட்டு மோசடி
அதன்படி, பொதுமக்கள் எரிபொருள் நுகர்வை தொடர்ந்து குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை,எரிபொருள் கியூஆர் குறியீட்டு முறைக்காக 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எரிபொருள் நிரப்புவதற்கான கியூஆர் குறியீட்டை மோசடியாக உருவாக்கிய பலர் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றமைக்கமைய குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri