QR தொடர்பான சிக்கல்களுக்கு புதிய எண் அறிமுகம்! அனுப்பும் முறை தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
தேசிய எரிபொருள் அனுமதி அல்லது QR குறியீட்டிற்கு பதிவு செய்வதற்கு உதவுவதற்காக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் விசேட வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பதிவு செய்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் நபர்கள், கீழே உள்ள நடைமுறையைப் பின்பற்றி உதவியைப் பெறலாம் என அறிவிக்கப்படுள்ளது.
அனுப்பும் முறை
உங்கள் வாகனப்பதிவு எண்ணைத் தட்டச்சு செய்து, 076 000 1919 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பவும். (வாகனப் பதிவு எண்ணைப் புகைப்படமாக அனுப்பக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்).

இதனுடன், பின்வரும் ஆவணங்களின் தெளிவான புகைப்படங்களையும் அதே எண்ணுக்கு அனுப்பவும்: - தேசிய அடையாள அட்டை (NIC) / சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு. - செல்லுபடியாகும் வாகன உரிமம். - வாகனப் பதிவுச் சான்றிதழ் (CR) என்பவற்னை அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்தியதரை கடலில் வெடித்து சிதறும் அபாயத்தில் பாரிய எரிவாயு கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
கியூஆர் குறியீடு திட்டம் நடைமுறை
இதேவேளை, கியூஆர் குறியீடு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களை தீர்த்த பின்னர் இன்றிலிருந்து எரிபொருள் நிலையங்களுக்கு வருமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கியூஆர் குறியீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், அவசர நிலை ஏற்பட்டாலும் கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது என்று எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.

"கியூஆர் குறியீடு தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், 1919 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து, அந்தச் சிக்கல்களைத் தீர்த்துவிட்டு எரிபொருள் நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கியூஆர் குறியீடுகள் இல்லாமல் எரிபொருள் வழங்க நேற்று நாங்கள் சில சலுகைகளை வழங்கினோம். ஆனால் இப்போது கியூஆர் குறியீட்டுடன் மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.இனி எந்த காரணமும் எற்றுக்கொள்ளப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர் News Lankasri
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri