ஆபத்தான சூழ்நிலையினால் QR முறைமையில் எரிபொருள் விநியோகம்! வெளியான காரணம்
கடந்த நாட்களில் பலர் எரிபொருள் சேகரித்து எரிபொருள் வரிசைகளை உருவாக்க முயற்சித்த நிலையில், இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்பதனால் QR குறியீடு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே கூறியுள்ளார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று தகவல் வழங்கிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு
எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை. இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்பதால், QR குறியீட்டைப் பயன்படுத்தினோம்.. அதைத் தவிர, எரிபொருளில் எந்த பிரச்சினையும் இல்லை.எரிபொருள் வரிசையில் காத்திருக்காமல் அனைவருக்கும் எரிபொருளை வழங்குவதே இதன் நோக்கம்.

நாட்டில் அவசர எரிபொருள் தேவை ஏற்பட்டால் எரிபொருள் வாங்குவது தொடர்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அது மிகவும் வெற்றிகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
QR குறியீட்டின்படி எரிபொருள் விநியோகம் இன்று (15) காலை 6.00 மணி முதல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்ற தொடர்புடைய வாகனம் மற்றும் தொலைபேசி எண்ணை வைத்திருப்பவர்களுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னர் பயன்படுத்தப்பட்ட QR குறியீடு இருந்தால், அதைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
QR குறியீடு பதிவிறக்கம்
இதற்கிடையில், உங்களிடம் QR குறியீடு இல்லையென்றால், https://fuelpass.gov.lk/ என்ற வலைத்தளம் மூலம் QR குறியீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வாகனத்தின் உரிமை, தொலைபேசி எண் மாறியிருந்தால் அல்லது முன்னர் QR குறியீட்டைப் பெறாத வாகனமாக இருந்தால், தொடர்புடைய வலைத்தளத்தின் வாகனப்பதிவை பார்வையிட்டு QR குறியீட்டைப் பெறலாம்.
அதன்படி, இன்று முதல், QR குறியீடு இல்லாமல் எரிபொருளைப் பெற முடியாது. கடந்த மூன்று முதல் நான்கு நாட்களில், பலர் எரிபொருள் சேகரித்து, ஊடக மாநாடுகளை நடத்தி எரிபொருள் வரிசைகளை உருவாக்குவதைக் கண்டிருக்கிறோம்.
இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்று நாங்கள் நினைத்ததால், QR குறியீட்டைப் பயன்படுத்தினோம்.. அதைத் தவிர, எரிபொருளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri