எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஐம்பது வீத எரிபொருள் இருப்பு பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்களை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து 770 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இதுவரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு, ராஜகிரியவில் இதுவரை விதிகளை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |