யாழிலிருந்து அம்பாறை சென்ற அரச பேருந்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்!
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சற்றுமுன்னர் பயணித்த அரச பேருந்தில் கொள்ளை சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் சற்று முன்னர் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை

சந்தேகநபர்கள் மூவர் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்து உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முற்பட்ட சமயத்தில்நடத்துனரை தள்ளிவிட்டு அவரிடமிருந்த பணத்தினை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, பல்லசுட்டி பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் வட்டுக்கோட்டை
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam