உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்! குற்றவாளிகளை பாதுகாக்க ரணில் முயற்சிக்க மாட்டார்: ஐ.தே.க. உறுதி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார். எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தில் சந்தேகப்படத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடமளிக்க வேண்டும்.
அதைவிடுத்துத் தூக்கிலிடப்பட வேண்டிய மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகளான கோட்டாபயவையும், பிள்ளையானையும் பாதுகாக்க ஜனாதிபதி முயற்சிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும் போதே வஜிர அபேவர்த்தன எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக சுயாதீன விசாரணைகள் இடம்பெறும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் ஜனாதிபதி எம்மிடம் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் சுயாதீன விசாரணைகளை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்.
தேவையேற்படின் சர்வதேச விசாரணையை நாட முடியும் என வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
