இலங்கையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட தனியார் கடன்கள் மற்றும் முன்பணங்கள் கடந்த ஆண்டில் (2025) ரூ. 406 பில்லியனாக அதிகரித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட தனியார் கடன்கள்
கடந்த ஆண்டில் (2025) உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட தனியார் கடன்கள் மற்றும் முன்பணங்கள் ரூ. 406 பில்லியளை தாண்டியுள்ளன.

இது, வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களில் 22 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோர் செலவினங்களின் அதிகரிப்புடன், தங்கப் பொருட்களின் மீதான கடன்கள், நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்கான கடன்கள் மற்றும் கடன் அட்டை தொடர்பான கடன்கள் ஆகியவற்றின் அதிகரிப்பே தனிநபர் கடன்களின் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்றும் மத்திய வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இதேவேளை, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு கடந்த ஆண்டில் சுமார் ரூ. 2.1 டிரில்லியனாகவும் அதிகரித்துள்ளது.
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri