சந்திரகுமார் அணியோடு சேர்ந்து அரசியலிலே செயற்பட முடியாது! சிறீதரன் எம்.பி. திட்டவட்டம்.

S. Sritharan Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Apr 16, 2026 08:10 AM GMT
Report

சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலே செயற்பட முடியாது. சிங்களக் கட்சிகளோடு இணைந்து இந்தத் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து, இப்போது தமிழ்த் தேசியம் பேசினால்தான் மக்களுடைய வாக்குகளைக் கவரலாம் என வருபவர்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலயரங்கில் நேற்று(15.04.2026) இடம்பெற்ற "தையிட்டி அடுத்து என்ன?" எனும் கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநர் நடவடிக்கை

நிர்வாகச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநர் நடவடிக்கை

தமிழரசுக் கட்சியினுடனான பேச்சுவார்த்தை

ஊடகவியலாளர்களின் கேள்வியும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பதிலும் பின்வருமாறு, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பேச்சுகள் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என கேள்வியெழுப்பட்டுள்ளது.

சந்திரகுமார் அணியோடு சேர்ந்து அரசியலிலே செயற்பட முடியாது! சிறீதரன் எம்.பி. திட்டவட்டம். | Sridharan Mp Speech

அதற்கு பதிலளித்த, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். நல்லது நடந்தால் வரவேற்பேன் என பதில் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்தப் பேச்சுகள் வெற்றி பெற்றால் அந்தக் கூட்டணியில் தொடர்ந்து செயற்படுவீர்களா? என கேட்கப்பட்டதற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியில் தொடர்ந்தும் நான் அங்கம் வகிக்கின்றேன். என்னை இன்னமும் தமிழரசுக் கட்சியிலிருந்து விலக்கவில்லை. விலக்கினால் சேர்ந்து செயற்படுவதா, இல்லையா என்பது தொடர்பில் முடிவு எடுப்பேன் என பதில் கொடுத்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கும் ஐ.நா

இஸ்ரேலின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கும் ஐ.நா

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள்.

எனினும், இதில் அங்கம் வகிக்கக்கூடிய மற்றுமொரு கட்சி சிங்களக் கட்சிகளோடு இணைந்து இந்தத் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து, இப்போது தமிழ்த் தேசியம் பேசினால்தான் மக்களுடைய வாக்குகளைக் கவரலாம் என வருபவர்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

அந்தக் கட்சியோடு இணைந்து எந்தவொரு தேர்தலிலும் பங்குபற்றக் கூடிய சூழ்நிலை கிளிநொச்சியில் இருக்காது. யாழ்ப்பாணத்தில் யாரேனும் சேர்ந்து தேர்தலிலே போட்டியிட்டால் அது அவர்களைப் பொறுத்தது.

மக்கள் முடிவே சிறந்தது..

சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலே செயற்பட முடியாது என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் நான் வெளிப்படையாகக் கூறியிருந்தேன். எங்கள் கட்சியினுடைய தலைவருக்கும் ஏனையவர்களுக்கும் இதனை தெளிவாகக் கூறியிருக்கின்றேன்.

சந்திரகுமார் அணியோடு சேர்ந்து அரசியலிலே செயற்பட முடியாது! சிறீதரன் எம்.பி. திட்டவட்டம். | Sridharan Mp Speech

வவுனியாவில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சிறீரெலோவோடு இணைந்து செயற்படுவது தொடர்பில் எனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். இவர்களால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து வரும் என்பதையும் எதிர்வு கூறியிருந்தேன். இன்று சிறீரெலோ கட்சியின் தலைவர் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இதேபோன்று சந்திரகுமாரும், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் இறக்கவில்லை, இறந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே எனக் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தியவர்.

பல பாடசாலைகளில் இருந்த அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர். தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே தனது பயணத்தை மேற்கொண்டவர். இன்று தமிழ்த் தேசியமே கதியென அவர் வந்திருக்கின்றார். இவ்வளவு காலமும் இவர்கள் செய்தது சரியா என்பதை மக்கள் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.   

யாழில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் உயிரிழப்பு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US