யாழில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் உயிரிழப்பு
யாழில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்றையதினம்(15.04.2026) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த பதின்மூன்றாம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்துள்ளார்.

அவரை அதிகாலை நான்கரை மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
குடல்வளரி ஏற்பட்டதால் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால் வாந்தி எடுத்தவேளை சுவாசக் குழாயினுள் வாந்தி சென்ற காரணத்தால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.