சிம்பாப்வே அணியிடம் போராடி தோற்ற இலங்கை அணி
இருபதுக்கு 20 உலகக் கோப்பையின் ஆரம்பச் சுற்றின் இறுதிப் போட்டியில் சிம்பாப்வே அணி அபார வெற்றியை பதிவு செய்யுள்ளது.
இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான குறித்த போட்டி இன்று(19) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம், இந்த தொடரில் இதுவரை போட்டிகளில் தோல்வியடையாத அணி என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டிருந்த இலங்கை, அதனை இழந்துள்ளது.
பிரையன் பென்னட்
அதன்படி, அவர்கள் குழு 'பி' இல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் சிம்பாப்வே பிடித்துள்ளது.

இருப்பினும், இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முன்பே இரு அணிகளும் சூப்பர் 8க்கு தகுதி பெற்றிருந்தன.
கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இலங்கை நிர்ணயித்த 179 ஓட்டங்கள் என்ற இலக்கை சிம்பாப்வே அணி இறுதி ஓவரில் (19.3) 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியடைந்தது.
சிம்பாப்வேயின் வெற்றிக்கு வழைிவகுத்த பிரையன் பென்னட் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையில், அணித்தலைவர் சிக்கந்தர் ராசா வெறும் 26 பந்துகளில் 45 ஓட்டங்களை அதிரடியாக பெற்றுக்கொண்டார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri