இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் - நாட்டில் பதிவான பாரிய மாற்றம்
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19.02.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டின் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இலங்கைக்கு சுமார் 436,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட மிக அதிகளவான எண்ணிக்கையாகும்.
அநுரவின் ஒரேயொரு கையெழுத்தில் மாறும் 12 பேரின் தலையெழுத்து! மரணத்தின் பிடியில் இருப்பவர்களுக்காக சென்ற அவசர செய்தி
கிரிக்கெட் தொடர்
15 நாடுகளை இலக்காகக் கொண்டு உலகளாவிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

விளையாட்டுத்துறை ஊடாக சுற்றுலாவை மேம்படுத்த இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது. கொழும்பு நகரில் உள்ள விருந்தகங்களில் அறைகள் நிரம்பியுள்ள விகிதம் தற்போது 100 வீதமாக காணப்படுகிறது. அத்துடன் அறைகளுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam