பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்! சந்தேகநபர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு
பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
13 சந்தேக நபர்களுக்கு இவ்வாறு சியல்கொட் நீதிமன்றினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை(06) குஜரன்வாலாவில் உள்ள பங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த நிலையில் சக ஊழியர்களால் இலங்கையைச் சேர்ந்த குமார தியவடன அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைப் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan