திருகோணமலையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் டுபாயில் மரணம்
திருகோணமலை - நாச்சிக்குடா பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, முகம்மது சப்ராஸ் என்ற இளம் குடும்பஸ்தர் நேற்று வியாழக்கிழமை(29) டுபாய் நாட்டில் காலமாகியுள்ளார்.
கடந்த சில தினங்களாக திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக டுபாயில் ஏடிசிபி (ADCB) என்ற பிரபல்யமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளம் குடும்பஸ்தர் மரணம்
சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக, அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

32 வயதான இளம் குடும்பஸ்தரான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் கடந்த இரண்டரை வருடங்களாக டுபாய் நாட்டில் தொழில் புரிந்து வந்ததாகவும், அவரது மனைவியும் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அன்னாரின் ஜனாஸாவை அந்த நாட்டிலே அடக்கம் செய்வதற்கு, தேவையான அலுவலகப் படிவங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஊடாக, அனுப்பி வைப்பதற்கு சகல முன்னெடுப்புகளும் இன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், நாளைய தினம் ( சனிக்கிழமை) பெரும்பாலும் அடக்கம் செய்யப்படலாம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri