பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும்,சுயாதீன ஊடகவியலாளருமான வாலசிங்கம் கிருஷ்ணகுமாரை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கர விசாரணைப்பிரிவினரால் நடத்தப்படும் விசாரணை ஒன்றிற்காக வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக எதிர்வரும் 14/09/2022 திகதி கொழும்பு-05 கிருலப்பனை, நாரேன்பிட்டியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு அழைப்பு
மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர் கிருஸ்ணகுமாரின் வீட்டிற்கு சென்று மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மேற்படி அழைப்பு கடிதத்தை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர்கள் மீது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய, கடந்த 2018 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கிருஸ்ணகுமாரிடம் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்
தற்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளரான செல்வக்குமார் நிலாந்தன், பொருளாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோர் மீது ஏற்கனவே பல விசாரணைகளை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பு பொலிஸ் மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினர் தற்போது அதன் தலைவரான வாலசிங்கம் கிருஸ்ணகுமார் மீதான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களை உலக அரங்கிற்கு வெளிக்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் என்பன மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் விரோத செயற்பாடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருகின்றது.
அந்த வகையில், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் நினைவு தினத்தை அனுஸ்டித்த மட்டக்களப்பு ஊடக அமையத்தின் ஊடகவியலாளர்களுக்கு துண்டுப்பிரசுரம் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
