நாட்டின் ஏற்றுமதிகள் ஸ்தம்பிக்கும் நிலையில்! அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டின் ஏற்றுமதிகள் ஸ்தம்பிக்கும் நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்றுமதிக் கொள்கலன் போக்குவரத்துச் சேவைகள் 90 வீதம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுல தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி கொள்கலன்களை போக்குவரத்து செய்யும் தமது வாகனங்களுக்கு ஒட்டோ டீசல் பெற்றுக் கொள்ளக் கூடிய வழிமுறை செய்யப்படாவிட்டால், போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு 60 வீமான அளவு டொலர்கள் ஏற்றுமதி கொள்கலன்களை அனுப்பி வைப்பதன் மூலம் கிடைக்கப் பெறுகிறது.
இலங்கை முதலீட்டுச் சபையின் கைத்தொழிற்சாலைகளில் ஏற்றமதி உற்பத்திகள் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றன.
ஏற்றுமதி பொருட்களை போக்குவரத்து செய்வதற்கு தடையாக காணப்படும் எரிபொருள் பிரச்சினைக்கு அரசாங்கம் உடன் தீர்வு வழங்க வேண்டும் என அவர் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.