தவறான செயலில் ஈடுபட்ட அரகலய போராட்டக்கள முக்கியஸ்தருக்கு நேர்ந்த கதி
பாணந்துறை பிரதேசத்தில் நடமாடும் பாலியல் தொழிலாளர் நிலையமொன்றைக் கண்டறிந்து அதனுடன் தொடர்புடையவர்களை அப்பகுதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (21.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
"அரகலய" போராட்டக்களத்துடன் தொடர்புடைய முக்கியஸ்தர் ஒருவரின் தலைமையிலான கும்பலொன்றே இந்த நடமாடும் பாலியல் தொழிலாளர் நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வாகனமொன்றில் பெண்களை வைத்துக் கொண்டு, உயர்மட்ட வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க இட்டத்துக்கிடம் பெண்களை அழைத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்
இச்சம்பவம் குறித்து பாணந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்களைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது "அரகலய" போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும், நான்கு பெண்களும் வாகனத்தில் இருந்துள்ளனர். அவர்களிடம் சேவை பெற வந்த இரண்டு ஆண்களும் அவ்விடத்தில் நின்றுள்ளனர்.
மொத்தமாக ஏழு பேரையும் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் (22.05.2023) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 4 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...வைரல் Cineulagam

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
