கிளிநொச்சியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள்: பொலிஸார் செய்த நெகிழ்ச்சி செயல்
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த இரு பாடசாலை மாணவர்களை அப்பகுதி பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர்.
குறித்த இரு மாணவர்களும் A9 வீதி ஓரமாக பாடசாலை செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்து வரும் வரை காத்திருந்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸ் வாகனத்தில் அங்கு வந்த பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இரண்டு மாணவர்களையும் தமது வாகனத்தில் ஏற்றி பாடசாலைக்கு கொண்டு சென்றதை காண முடிந்தது.
பொலிஸாரின் செயற்பாட்டுக்கு பாராட்டு
பொலிஸாரின் இந்த செயற்பாட்டுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |