ஆயிரம் லீட்டர் நீர்த் தாங்கியில் எரிபொருள் சேமிக்கும் இலங்கையர்
இலங்கையில் நபர் ஒருவர் ஆயிரம் லீட்டர் நீர்த் தாங்கியில் எரிபொருளை வாங்கி சேமித்து வைப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தற்போது மத்தியக் கிழக்கில் நிலவும் கடும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு ஏற்படுதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
மிக நீண்ட எரிபொருள் வரிசை
இந்த நிலையில், இலங்கையிலும் கூட அண்மைய சில நாட்களாக மிக நீண்ட எரிபொருள் வரிசை தோற்றம் பெற்றுள்ளதுடன், மக்கள் மிக அதிகமாக எரிபொருளைப் பெற்று சேமித்து வைக்கின்றமை தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளன.
இதேவேளை, அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் போதுமான கையிருப்பு உள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் அண்மையில் அறிவித்திருந்தார்.
எனினும், மோதல் நிலை மேலும் அதிகரிக்குமாயின் எரிபொருளுக்கான பற்றாக்குறை மற்றும் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்று கடந்த இரு நாட்களாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒரு சில இலங்கையர்கள் பாரிய கேன்களிலும், நீர்த் தாங்கிகளிலும் எரிபொருளை நிரப்பி சேமிப்பது தொடர்பான காணொளிகள் செமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில், இதுபோன்ற செயற்பாடுகள் ஏனைய இலங்கையரிடத்தில் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 5 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
