ஈரானுக்கு மீண்டும் விடுக்கப்படும் எச்சரிக்கை.. மீறினால் தாக்கப்படும் - இஸ்ரேல் திட்டவட்டம்!
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தால், அதை அழிப்போம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்த அறிவிப்புக்கு பின்னர் நெதன்யாகு வழங்கியுள்ள முதல் நேர்காணலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "நாங்கள் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றோம், இந்த வெற்றி தலைமுறைகளுக்கு நிலைத்திருக்கும்.
நாங்கள் ஒரு சிங்கம் போல எழுந்தோம், எங்கள் கர்ஜனை தெஹ்ரானை உலுக்கியது. இந்தப் போர் உலகின் அனைத்துப் படைகளிலும் பேசப்படும்.
வரலாற்று வெற்றி
அராக், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானில் உள்ள முக்கியமான வசதிகளை நாங்கள் அழித்தோம். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் உருவாக்க முயற்சித்தால், அதை அழிப்போம்.
צפו בראיון שלי בערוץ 14 >> pic.twitter.com/RM1mr3J2f9
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) June 24, 2025
கடத்தப்பட்ட வீரர்களைத் திருப்பி அனுப்பி ஹமாஸை அழிப்பதன் மூலம் ஈரானிய தீய அச்சுக்கு எதிரான பணியை நாம் முடிக்க வேண்டும். ஈரானிய அதிகாரிகளும் போரில் வெற்றியைக் கோரியுள்ளனர்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களை அகற்றுதல் என்ற தங்கள் இலக்குகளை அடையாமல் போர்நிறுத்தத்தைக் கோரின” என குறிப்பிட்டுள்ளார்.
