ஈரானின் முக்கிய அறிவிப்பு! முடிவுக்கு வருமா பதற்றம்..!
புதிய இணைப்பு
இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முன்பு முடித்துக்கொண்டால் ஈரான் போர் நிறுத்தத்திற்கு உடன்படும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் செயத் அபாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருக்குமா என்ற சந்தேகம் பலரின் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், போர் நிறுத்தம் எனக் கூறிவிட்டு இரண்டு நாடுகளும் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், ஈரானுக்கு எதிரான நடவடிக்கையின் அனைத்து நோக்கங்களையும் இஸ்ரேல் அடைந்து விட்டதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடைசி சுற்று ஏவுகணைகள்
அதாவது, தெஹ்ரானின் வான்வெளியில் முழுமையான வான் கட்டுப்பாட்டை இஸ்ரேலிய இராணுவம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஈரானின் இராணுவத் தலைமைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஈரான் இஸ்ரேலை நோக்கி கடைசி சுற்று ஏவுகணைகளை வீசியதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |