தடுமாறும் இலங்கை! இந்தியாவை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. தாய்லாந்துக்கு விஜயம் செய்ய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>> கோட்டாபயவின் வருகை தொடர்பில் தாய்லாந்து வெளியிட்ட தகவல்
2 எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து விபரித்துள்ளார்.
மேலும் படிக்க >>>மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு
3 சர்வஜன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் ஒன்றை நடத்தினால், ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள், சிறப்பான தலைமைத்துவதை நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எந்த தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>தேர்தலை நடத்தினால் ஜனாதிபதிக்கே வெற்றி:ரணில் யுக புருஷர்-நிமல் சிறிபால
4 இந்தியா, டோர்னியர் (Dornier) உளவு விமானம் ஒன்றை இலங்கையின் படைகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க >>>சீன கப்பல் விவகாரம் - தடுமாறும் இலங்கை!
5 நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பமான பின்னர் நாடாளுமன்ற உணவகத்தில் நடைபெற்ற தேனீர் விருந்து செலவுக்கான பணத்தை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தியதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>நாடாளுமன்ற தேனீர் விருந்துக்கு 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாவை செலவு செய்த ரணில்!
6 நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக விரிவான அதிகாரத்தைக் கொண்ட அபிவிருத்தி குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் படிக்க >>>ரணிலின் ஆட்சியில் அமைச்சருக்கு இணையான பலமான புதிய பதவி
7 இலங்கையில் நிலவிய எரிபொருள் நெருக்கடி, தேசிய எரிபொருள் நடைமுறைக்காக முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எரிபொருள் நிரப்புவதற்கு பிறரின் கியூ.ஆர் குறியீடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க >>>கியூ.ஆர் குறியீட்டு அட்டை பாவனையில் கடுமையான நடைமுறை
8 தேசிய குறைந்தபட்ச மாத மற்றும் நாளென்றுக்கான சம்பளத்தொகைகளை அதிகரிப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>மாத மற்றும் நாள் சம்பளத்தொகை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
9 நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நெருக்கடி நிலையில் அரசாங்கம்
10 இலங்கை இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், தேவையான வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க >>>இந்தியாவை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா