தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி: நாட்டுக்கு பேரிழப்பு : சஜித் சாடல்
தற்போதைய அரசாங்கம் தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாட்டு மக்களுக்கும் மின் நுகர்வோருக்கும் பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆதாரங்களை வெளியிட்டதையடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தது என்பதை அரசாங்கமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
தரமற்ற நிலக்கரியால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்கள் சேதமடையும் அபாயம் அதிகரித்துள்ளது.
பெரும் நிதிச் சுமை
நிலக்கரியிலிருந்து வெளியேறும் சாம்பலின் அளவு 11-15% ஆக இருக்க வேண்டிய நிலையில், தற்போது அது 21% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது கடுமையான சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தரம் குறைந்த நிலக்கரியால் மெகாவாட் உற்பத்தி குறைந்துள்ளது.
இந்த இடைவெளியை நிரப்ப அதிக செலவு கொண்ட எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அரசுக்கும் மக்களுக்கும் பெரும் நிதிச் சுமை ஏற்படுகிறது.

அத்துடன் "2009 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின் 30வது பிரிவின்படி, முறையான மற்றும் வினைத்திறனான மின் உற்பத்தியின் மூலமே மக்களிடம் கட்டணம் வசூலிக்க முடியும். அரசாங்கத்தின் ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் நட்டத்தை 75 இலட்சம் மின் நுகர்வோர் மீது சுமத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது." என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஊழல் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து ஆராய நிபுணர் குழுக்களுக்குப் பதிலாக ஒரு தடயவியல் கணக்காய்வு (Forensic Audit) நடத்தப்பட வேண்டும். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஜனாதிபதியும் அமைச்சரவையும் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
மேலும் இந்த ஊழல் மூலம் விரயமாக்கப்பட்ட பணத்தைக் கொண்டு பாடசாலைகள், வைத்தியசாலைகளை கட்டியிருக்கலாம் அல்லது ஏழை மக்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 21 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan