மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
போர் முடிவடைவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளியுறவுச் செயலாளர்கள், போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவுக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுத்தனர் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அந்த அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மகிந்த ராஜபக்ச போரை நிறுத்தியிருந்தால் இன்று ஈழ தேசடம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..
சரியான அரசியல் தலைமைத்துவம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த வடகிழக்கு யுத்தத்துக்குச் சரியான அரசியல் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே வழங்கியிருந்தார். அதனை எவராலும் மறுக்க முடியாது.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற வடமராட்சிப் போரின்போது பிரபாகரனை முழுமையாகச் சூழ்ந்து கொண்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழிப்பதற்கு இன்னும் சில தினங்களே இருந்த நிலையில், அன்றைய ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கம் அச்சமடைந்து போரை நிறுத்தியது.

அன்று போரை நிறுத்தியிருக்காவிடில் பயங்கரவாதம் அப்போதே ஒழிக்கப்பட்டிருக்கும். அதேபோன்று, 2009 மே மாதத்தில் யுத்தம் முடிவடைவதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளியுறவுச் செயலாளர் பேர்னார்ட் குஷ்னர் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் ஆகியோர் ஒன்றிணைந்து போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்சவுக்குப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தனர்.
அன்று அவர் அந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்து போரை நிறுத்தியிருந்தால், இன்று இந்நேரம் ஈழ நாடு பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். அந்த அழுத்தங்களுக்குப் பணியாது போரை வெற்றிகரமாக முடித்து வைத்த பெருமை மகிந்த ராஜபக்சவுக்கு உரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 இலட்சம் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் : சர்ச்சையை கிளப்பும் சரத் வீரசேகர
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri