மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணிக்காக 1570 ஏக்கர் நிலத்தினை மகாவலியை ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை பழைய கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 10900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட 2306 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த ஆண்டு 8625 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
டித்வா புயல்
இக்கூட்டத்தில் மிகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக முக்கியமாகப் பேசப்பட்டது.

இதன்போது, இந்த பிரச்சனை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் விடயங்களை கேட்டறிந்தார், அதனைத்தொடர்ந்து மகாவலி திணைக்களத்திடம் ஜனாதிபதியால் 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து மேய்ச்சல் தரைக்கு வழங்கும்படியும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். எதிர்வரும் காலங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, கிராமியப் பாலங்கள், கிராமிய வீதிகள், வீட்டுத்திட்ட வேலைகள், நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், எனப் பரிபாலன சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இவற்றுக்கான செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பாகவும், இந்த திட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைகள் தொடர்பாகவும், மீதமுள்ள வேலைகள் தொடர்பாகவும், நிதி பெறப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் நடைமுறைகள் பற்றியும், இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், குறிப்பாக டித்வா புயல் காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது, எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
ஆரம்பிக்கப்படவுள்ள பணிகள்..
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு குளங்களை இணைத்து முன்னெடுக்கப்படவுள்ள முந்தனையாறு நீர்ப்பாய்ச்சல் குளம் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்து அபிவிருத்தி பணியை ஆரம்பிக்கவும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல் விடயம், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி தொடக்கம் மண்டூர் வரையான பாலங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
யானை - மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யானை வேலிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்க இருப்பதாகவும், சகல இடங்களுக்கும் இந்த வேலிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, யானை வேலிகளை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கான காரியாலயம் மட்டக்களப்பில் இல்லை எனவும், அவ்வாறான காரியாலயம் இல்லாமையினால் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு ஊழியர்கள் சரியான முறையில் வருவதில்லை எனவும், உரிய முறையில் நெல்லைக் கொள்வனவு செய்வதில்லை எனவும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கு உரிய முறையில் சிறந்த தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து, அதற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிப்பதாகவும், தற்போது மூன்று திட்டங்கள் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் தேவைகள், அபிவிருத்திப் பணிகள் என்னென்ன முன்னெடுக்க வேண்டுமோ, அவற்றையும் உரிய முறையில் முன்னெடுப்பதாகவும், அபிவிருத்திப் பணிகளுக்கான நிதிகளை விரைவில் ஒதுக்குவதாகவும், பாதீட்டின் மூலம் எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தேவையான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான நிதிகளை ஒதுக்குவதாகவும் இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது.
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்







மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam