இறக்குமதி தடை நீக்கம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

“இந்த நேரத்தில், ஒரு நாடாக நாம் தீர்மானிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட அந்நியச் செலாவணி எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.
எண்ணெய், மருந்து, எரிவாயு கொண்டு வருவதாக அல்லது கையடக்க தொலைபேசி, கார், தொலைக்காட்சி கொண்டு வர வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.
அத்தியாவசியமற்றவை தடை
அத்தியாவசிய விடயங்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டால், இது போன்ற சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். அதனால்தான் அத்தியாவசியமற்றவை தடை செய்யப்பட்டன.
இவை தற்காலிகமான விடயங்கள். சில தொழில்கள் பாதிக்கப்படும் என்பதை அறியாமல் இது செய்யப்படவில்லை. ஆனால் இந்த கட்டத்தில் முக்கியமான விடயம், வரையறுக்கப்பட்ட வளங்களை மிகவும் திறமையான முறையில் பயன்படுத்துவதாகும்.
இந்த நிலைமை தீர்க்கப்பட்டவுடன், கட்டுப்பாடுகளை முறையாக அகற்ற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam