ஐஸ் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது! காதலனைத் தொடர்ந்து காதலியும் சிக்கினார்
காலி, கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த நம்பகமான இரகசியத் தகவலின் அடிப்படையில் கரந்தெனிய பகுதியில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
காதலனும் கைது
இதன்போது, நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்த யுவதியின் காதலன், அண்மையில்தான் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காதலன் சிறைக்குச் சென்ற பின்னர், இந்த யுவதி போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத் திட்டங்களைச் சொந்தமாக முன்னெடுத்து வந்தாரா அல்லது இந்த வலையமைப்பின் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளார்களா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..