இறுதி கட்டத்தில் 2025 வரவு செலவுத்திட்டம்!
2025 வரவு செலவுத்திட்டத்தின் இறுதி கட்ட தயாரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்று(13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.
வரவு செலவுத்திட்டம்
எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான கலந்துரையாடலாகவே இது அமைந்துள்ளது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன மற்றும் அரசாங்க அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.