அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்
அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நிலையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சராக கலாநிதி பந்துல குணவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார்.

பதவி விலகுமாறு அறிவிப்பு
அதன்போது அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களாக பதவி வகித்தவர்களை பதவி விலகுமாறும் அந்த நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்திருந்தார்.
அதற்கேற்ப அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் இராஜினாமாக் கடிதங்களை சமர்ப்பித்திருந்தனர்.
நியமனங்கள்
பின்னர் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அதன் முன்னைய தலைவர் ஹட்சன் சமரசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக பட்டயக் கணக்காளர் கணக அமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்றைய தினம் ஊடக அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri