மாலைதீவுடன் இணக்கம் வெளியிட்டுள்ள இலங்கை

Sivaa Mayuri
in பொருளாதாரம்Report this article
இலங்கை (Sri Lanka) தனது பிரத்தியேக பொருளாதார வலயம் அல்லது நாட்டின் பிராந்திய கடலின் அளவை விஸ்தரிக்கும் முயற்சியில் மாலைதீவுடன் (Maldives) இராஜதந்திர மோதல்களை வெற்றிகரமாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு பிரத்தியேக பொருளாதார மண்டலம் என்பது கடலின் ஒரு பகுதியாகும். பொதுவாக ஒரு நாட்டின் பிராந்திய கடலுக்கு அப்பால் 200 கடல் மைல்கள் அளவில் இது நீடிக்கப்படுகிறது.
உரிமை கோரல்
இந்தநிலையில் இலங்கை தமது கடல்பிராந்தியத்துக்கு அப்பால் 200 கடல் மைல்களுக்கு தமது பிரத்தியேக பொருளாதார வலயத்தை விஸ்தரித்துக் கொள்வதற்காக, 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளிடம் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான தரவுகள் மற்றும் பிற தகவல்களை சமர்ப்பித்தது.
இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு, இலங்கையுடன் இந்த விடயத்தில் ஈடுபட ஒரு துணை ஆணைக்குழுவை 2016இல் நிறுவியது.
இதனையடுத்து இலங்கை பிரதிநிதிகள் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.குறித்த விரிவாக்கத்தில் மாலைதீவுக்கும் உரிமை கோரல் இருந்துள்ளன.
எனினும் விடயத்தில் இரண்டு தரப்புக்களும் ஒத்துழைப்புடன் செயற்பட இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 3 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
