நீர்கொழும்பு கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய கடற்றொழில் படகு : மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்
நீர்கொழும்பு அருகே கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அங்கு இருந்த கடற்றொழிலாளர்களை மீட்க, இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன.
இந்த விபத்தில் சிக்கிய கடற்றொழிலாளர்களை தேடுவதற்கு, விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய படகுகளில் ஒன்று
மற்றொரு கடற்றொழில் படகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், நேற்று பிற்பகல் (31) கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு சிறு படகு விபத்தில் சிக்கியது முதலில் தெரியவந்தது.

இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்ற மேலும் 3 கடற்றொழில் படகுகள் காணாமல் போனமை தெரியவந்துள்ளது.
தற்போது, விபத்தில் சிக்கிய படகுகளில் ஒன்றில் இருந்த ஒரு கடற்றொழிலாளரின் சடலம் நீர்கொழும்பு கரைக்கு ஒதுங்கியுள்ளது,
அதே சமயம் அதே படகில் பயணித்த மேலும் இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காணாமல்போன கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் தேடுவதற்காக, கடற்படைக்குச் சொந்தமான கப்பலும் சிறப்பு நீர்மூழ்கி குழுவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது! Manithan
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri