அவசர மற்றும் ஆபத்தான தருணங்களில் பொலிஸாரின் உதவியைப் பெற்றுக் கொள்ள விசேட மொபைல் செயலி
அவசர மற்றும் ஆபத்தான சந்தர்ப்பங்களில் பொலிஸாரின் உதவியை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையிலான செயலியொன்றை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த புதிய செயலியானது 'SOS' வசதியுடன் கூடிய புதிய மொபைல் செயலியாகும் என்று இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
SOS பொத்தான் பயன்படுத்தல்
அதன் பிரகாரம் இச்செயலியில் உள்ள 'SOS' பொத்தானைச் சிறிது நேரம் அழுத்திப் பிடிப்பதன் மூலம், குறித்த நபரின் இருப்பிடம் உடனடியாக அப்பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை, பெற்றோரின் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இச் செயலியில் பதிவு செய்ய முடியும்.
மேலும் பொலிஸ் அவசர சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.