இறுதி ஆட்டத்தில் இலங்கை ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணி பலப்பரீட்சை
ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின், வளர்ந்து வரும் ஆவடர்களுக்கான 20க்கு 20 போட்டித் தொடரில், இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஓமான் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இலங்கை ஏ அணி பாகிஸ்தானின் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
மேலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
இறுதிப் போட்டி
அதேநேரம் தொடரின் இறுதிப் போட்டி நாளை (27.10.2024) நடைபெறவுள்ளது.

நேற்றைய போட்டியில் 136 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 17வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam