இறுதி ஆட்டத்தில் இலங்கை ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணி பலப்பரீட்சை
ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின், வளர்ந்து வரும் ஆவடர்களுக்கான 20க்கு 20 போட்டித் தொடரில், இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஓமான் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இலங்கை ஏ அணி பாகிஸ்தானின் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
மேலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
இறுதிப் போட்டி
அதேநேரம் தொடரின் இறுதிப் போட்டி நாளை (27.10.2024) நடைபெறவுள்ளது.

நேற்றைய போட்டியில் 136 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 17வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam