தம்பலகாமத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டிற்கான விளையாட்டு போட்டிகள்
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு திருகோணமலை (Trincomalee) - தம்பலகாமம் பிரதேச செயலக சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டு போட்டிகள், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, பலூன் உடைத்தல், முட்டி உடைத்தல், தலையணை சமர் மற்றும் யானைக்கு கண் வைத்தல் உட்பட பல போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளன.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
மேலும், இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள, மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ. ஆர். எம். சித்திக் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செய்தி : ஹஸ்பர் ஹலீம்



