டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறும் ஏஞ்சலோ மெத்யூஸ்
இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ், தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இன்று(16) காலியில் தொடங்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, அவருக்கு கடைசி டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.
ஏஞ்சலோ மெத்யூஸ்
இன்றைய போட்டியின் மூலம் மெத்யூஸ் தனது 119ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறார்.
இதற்கு முன்னதாக மஹேல ஜெயவர்த்தன (149), சங்கக்கார (134) மற்றும் முரளிதரன் (132) ஆகிய வீரர்களே நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
சங்கக்கார மற்றும் ஜெயவர்த்தன ஆகியோருக்கு பின்னர் 8000+ டெஸ்ட் ரன்கள் எடுத்த இலங்கையின் மூன்றாவது வீரராகவும் அஞ்சலோ மெத்யூஸ், உள்ளார்.
2013–2017 காலப்பகுதியில் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை வகித்துள்ளார்.
மெத்யூஸ் தான் 99 மற்றும் 199 என்ற இரு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து சதம் மற்றும் இரட்டை சதத்தை இழந்த ஒரு வீரராக கிரிக்கெட் வரலாற்றில் பார்க்கப்படுகின்றார்.
2009–10 இல் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் 99இல் ஆட்டமிழந்தார். 2022 – பங்களாதேஷ் எதிரான போட்டியில் 199ல் ஆட்டமிழந்தார்.
சகலத்துறை விளையாட்டு வீரராக உள்ள அவர் பந்துவீச்சில் இதுவரை 33 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா, சகிப் அல் ஹசன் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் மெத்யூஸின் தொழில்முறை நெறிப்பற்று மற்றும் தோழமை குறித்துப் புகழ்ந்துள்ளனர். அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் "மெத்யூஸ், இலங்கை கிரிக்கெட்டின் 'silent warrior'" என புகழ்ந்துள்ளார்.
ரோகித் சர்மா
இவ்வாறான வீரரொருவர் ஓய்வை அறிவிப்பது இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரும் இழப்பாக உள்ளது.
இந்தநிலையில், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
Rohit Sharma's heartfelt message to Angelo Mathews on his retirement.🤍 pic.twitter.com/1zykzOVVuq
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) June 17, 2025
உங்கள் அருமையான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
பல வருடங்களாக எங்கள் 19 வயதுக்குட்பட்ட நாட்களிலிருந்தே இன்று வரை நமக்குமள் சில நல்ல போட்டிகள் நடந்துள்ளன.
நீங்கள் உங்கள் நாட்டிற்கு ஒரு உண்மையான சேவையாளராக இருந்திருக்கிறீர்கள், மேலும் உங்கள் நாட்டிற்காக நீங்கள் செய்ததை வீட்டில் உள்ள அனைவரும் பாராட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் சந்திமால்
மற்றும், அவரது நெருங்கிய அணித்தோழரும் சக வீரருமான தினேஷ் சந்திமால்,
உணர்வுபூர்வமான மரியாதை செலுத்தியுள்ளார்.
நீ இலங்கை கிரிக்கெட் உருவாக்கிய மிக அரிய மற்றும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவன் என்பதை நிச்சயமாகவே சொல்கிறேன். உன்னுடன் களத்தில் நேரத்தை பகிர்ந்தது ஒரு பெரும் வரப்பிரசாதமாகவும், அரிய வாய்ப்பாகவும் இருந்தது.
ஒரு அணித்தோழராக மட்டுமல்ல, ஒரு கேப்டனாகவும், ஒரு தலைவராகவும், முக்கியமாக ஒரு மனிதராகவும் – உன்னிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். இன்று பிறகு, சர்வதேச டெஸ்ட் அரங்கில் உன்னையும் உன்னுடைய அழகான புன்னகையையும் நாம் மீண்டும் காண முடியாது.
உன்னுடன் இதனைச் சொல்லும் தருணம் எளிதல்ல. ஆண்டாண்டாக நீண்ட பயணத்தை நாம் ஒரே அணியில் செலவிட்டோம்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் உன்னை மிக்கதாக மிஸ் செய்யும். கடைசியாக சொல்வது – நாம் களத்தில் சேர்ந்து எண்ணற்ற மதிப்புமிக்க கூட்டிணைப்புகளை உருவாக்கினோம்.
ஆனால் அதைவிட பெரிய ஒன்றை, ஒரு அழியாத நட்பை உருவாக்கினோம்” என குறிப்பிட்டுள்ளார்.