இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து பேராசிரியர் வெளியிட்ட தகவல்
இலங்கை குறுகிய காலத்தில் அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் வசந்த அதுக்கோரல தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், தற்போதைய வளர்ச்சி விகிதத்தை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைய வேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக உள்ளது.
மேலும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் -0.7 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.
தொழில்துறை துறை
மேலும், தொழில்துறை துறை 9.7 சதவீதத்தாலும், சேவைத் துறை 2.8 சதவீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில், விவசாயம் மற்றும் சேவைத் துறைகள் வேகமான விகிதத்தில் வளர வேண்டும் என்று பேராசிரியர் வசந்த அதுக்கோரல சுட்டிக்காட்டினார்.