கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறி
கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறியொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பயிற்சி நெறி இன்று (27-05-2025) மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பயிற்சிநெறியில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் உற்பத்திகளை அதிகரித்தல், அவற்றுக்கான தரத்தை உயர்த்துதல், உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், அத்துடன் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைபள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளார் பிரிவுகளை சேர்ந்த சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் மற்றும் சவால்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
