மட்டக்களப்பில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு
பயணக்கட்டுப்பாட்டை மீறுவோரை கண்டறியும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் பயணக்கட்டுப்பாடுகளை மீறும் வகையில் பலர் செயற்பட்டு வரும் நிலையில் பொலிஸாரினால் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது கூழாவடி பகுதியில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வர்த்தக நிலையமொன்று பொலிஸாரினால் பூட்டப்பட்டதுடன் ,அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கையெடுக்கப்பட்டது.
இதேபோன்று பயணத்தடையினையும் மீறி பயணம் மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான நடவடிக்கையும் பொலிஸாரினால் எடுக்கப்பட்டது.
அத்துடன் பயணத்தடை காலத்தில் பயணம் மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை தவறான முறையில் பயன்படுத்துவோரும் இதன்போது இனங்காணப்பட்டு கடுமையாக எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.




வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri