4 மணிக்கு சிறப்பு கட்சி தலைவர்கள் கூட்டம்: மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர அழைப்பு
இன்று மாலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 04.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Speaker has called for a special party leaders meeting at 4pm. #manoganesan #SriLankaCrisis #GoHomeGota
— Mano Ganesan (@ManoGanesan) July 9, 2022
பிரதமர் கோரிக்கை
இன்று பிற்பகல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்து விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக அவசர கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார்.
வரலாற்றில் முதல் முறையாக பதிவான சம்பவம் - அவசர கூட்டத்திற்கு ரணில் அழைப்பு! நாடாளுமன்றத்தை கூட்டவும் கோரிக்கை |
தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்று இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்.