நாட்டிலுள்ள அஞ்சல் ஊழியர்களுக்கு விசேட சலுகை
இலங்கையில் உள்ள அஞ்சல் பணியாளர்களுக்கு அஞ்சல் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, விசேட சலுகை ஒன்று வழங்கப்படவுள்ளது என்று அறிவிப்பக்கட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய துவிச்சக்கரவண்டி அல்லாமல், முச்சக்கர வண்டிகளில் அஞ்சல் விநியோகம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அஞ்சல், சேவையின் நவீனமயமாக்கலின் போது, நீண்டகாலமாகக் களத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த துவிச்சக்கரவண்டிகளுக்கு பதிலாக 1000 முச்சக்கரவண்டிகள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும்.

தனியார் மயமாக்கப்படமாட்டாது
இதன் மூலம் வலுவான அஞ்சல் சேவையை உருவாக்குவதே இறுதி இலக்காகும் என வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
10 பில்லியன் செலவில் பொது-தனியார் கூட்டுப் பங்காளியாக இந்த நவீனமயமாக்கல் செயல்முறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் அஞ்சல் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் 4,000 மில்லியன் ரூபாவால் குறைக்கப்படும். எனினும் அஞ்சல் திணைக்களம் எவ்வகையிலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 15 மணி நேரம் முன்
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri