மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ஊடகவியலாளரை அனுமதித்த உயர் அதிகாரி

Batticaloa Sri Lanka Eastern Province
By Farook Sihan Oct 26, 2023 03:16 PM GMT
Report

புதிய இணைப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இருக்கும் தகவல் திணைக்களம் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை திட்டமிட்டு தொடர்ச்சியாக பழிவாங்கிகொண்டே வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பழிவாங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோகினி பிரீஸ் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து ஊடகவியலாளரிடம் மன்னிப்பு கோரியதுடன் கலந்துரையாடலில் பங்குகொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ஊடகவியலாளரை அனுமதித்த உயர் அதிகாரி | Special Discussion Act Media Sector In Batticaloa

இந்நிலையில் சசி புண்ணியமூர்த்தியை மாவட்ட செயலகம் புறக்கணிப்பதன் காரணம் என்ன? உண்மைகள் வெளிவருவது இவர்களுக்கு பிடிக்கவில்லையா? ஊடகவியலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டிய மட்டு செயலக தகவல் திணைக்களம் அரசியல் செய்கின்றதா? என்ற பல்வேறு கேள்விகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (26.10.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! கதறி அழும் அம்பிட்டிய தேரர் (Video)

தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! கதறி அழும் அம்பிட்டிய தேரர் (Video)

கொள்கை சட்டம்

வெகுசன ஊடக அமைச்சு அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில்நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ஊடகவியலாளரை அனுமதித்த உயர் அதிகாரி | Special Discussion Act Media Sector In Batticaloa

இந்த குழு பல சந்தர்ப்பங்களில் கூடி விசேட குழுக் கலந்துரையாடல்கள் மூலம் தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்கும் செயல்முறையில் அனைத்து பங்குதாரர்கள் மற்றும்ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.

இதன்போது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது.

இலங்கையில் 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

இலங்கையில் 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

வழிநடத்தல் குழு

இதற்கான காரணம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு விரிவாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வாறான ஒரு கொள்கை சட்டமொன்றை உருவாக்கி அதனை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தும் போது ஊடகவியலாளர்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படாத வண்ணம் அது அமைய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட ஊடகவியலாளரை அனுமதித்த உயர் அதிகாரி | Special Discussion Act Media Sector In Batticaloa

அவ்வாறான சட்டமொன்றை உருவாக்கும்போது கட்டாயமாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கும்போது அக்குழுவில் கட்டாயமாக மாவட்ட ரீதியில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதன்போது ஊடகவியலாளர்களிடமிருந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் டீ.எல்.யூ.பீரீஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் மொழி மற்றும் தொடர்பாடல் கற்கைகள் பிரிவின் தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிவபிரியா, வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டபிள்யூ.பீ.செவ்வந்தி, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமாகிய மஹிந்த பத்திரன, மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், வெகுசன ஊடக அமைச்சின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஊடகம்சார் விசேட நிபுணர் சதுரங்க அப்புவாராச்சி, உயரதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.குறித்த கலந்துரையாடலில் கல்வியியலாளர்கள், வெகுசன ஊடக நிறுவன பிரதிநிதிகள், உரிமைசார் அமைப்புக்கள் ,ஊடகவியலாளர்கள்,பிராந்திய ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்த சந்தேகநபர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்த சந்தேகநபர் கைது

சி.வி.கே சிவஞானத்திற்கு மீண்டும் புதிய பதவி!

சி.வி.கே சிவஞானத்திற்கு மீண்டும் புதிய பதவி!

GalleryGalleryGalleryGallery
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US