தென்மாகாண ஆளுநரின் தேர்தல் மீறல் : ஆணைக்குழுவுக்கு முறையிட்ட பெப்ரல்
தென் மாகாண ஆளுநரின் தேர்தல் மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள சமூக ஆலோசனைக் குழுக்களுக்கு, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல்களின் வேட்பாளர்களை நியமிக்கும் பணிகளை அவர் மேற்கொண்டதன் மூலம் இந்த தேர்தல் விதி மீறல் இடம்பெற்றுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கை
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பு (PAFFREL) மூலம் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மற்றும் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதிகளாக செயற்படும் ஆளுநர்களை உள்ளடக்காமல், மாவட்ட செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்கள் ஊடாக உத்தேச குழுக்களின் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று பெப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
2024 ஏப்ரல் 29 அன்று ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அபிவிருத்தி மற்றும் நலன்புரி திட்டங்களை முன்னெடுக்கும் போது, தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைக்கு அமைவாக அரச அதிகாரிகளினால் அது மேற்கொள்ளப்பட வேண்டும்.
வழக்குத் தாக்கல்
அதில் அரசியல் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்டிருக்கக் கூடாது.முன்மொழியப்பட்ட சமூக ஆலோசனைக் குழுக்களில் அரசியல்வாதிகள் நியமிக்கப்படக் கூடாது என்றும், குறித்த குழுவுக்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கும்போது தெளிவான அளவுகோல் இருக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், தென் மாகாண ஆளுநர் வழக்கை புறக்கணித்துவிட்டு, குறித்த குழுவுக்கு அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்களை ஆளுநரின் பிரதிநிதிகளாக நியமித்து அபிவிருத்திகளை மேற்பார்வையிட்டு வருவதாக அந்தக் கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நலன்புரி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் ஒருங்கிணைப்புக்கான இத்தகைய நியமனங்கள் ஒரு அரசியல் கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் ஊக்குவிப்பது தவிர்க்க முடியாது.
எனினும் அத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மற்றும் கட்டளைகளை மீறுவதாகவும் ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை](https://cdn.ibcstack.com/article/a2a716bb-b407-43a5-b593-cbf37213b67c/24-667e98289dbd1-sm.webp)
இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை Manithan
![தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/ebaf1ae0-7c64-4543-8b01-3dd09e4c522b/24-667e69c5e68b2-sm.webp)
தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
![பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா](https://cdn.ibcstack.com/article/e2c922b6-4439-475b-834d-fbef2a465e23/24-667e5ba59891d-sm.webp)
பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா Manithan
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)
கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க Cineulagam
![பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி](https://cdn.ibcstack.com/article/a2345d42-b9d5-4912-84d6-9cfac959dfe2/24-667e9fe57c6eb-sm.webp)
பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி News Lankasri
![மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல சீரியல் நடிகை... அவரே பதிவிட்ட ஷாக்கிங் தகவல்](https://cdn.ibcstack.com/article/99a215cb-ab29-4654-862f-a4bdce3da22b/24-667e6e3f68db2-sm.webp)