பொது மக்களுக்கு பயந்து ஒளிந்து திரியும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்
இலங்கையில் பொது மக்களுக்கு பயந்து ஒளிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை கடந்து செல்லும் போது மக்கள் தம்மை தாக்குவார்கள் என அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை முழுவதும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தை நெருங்கும் போதே முகத்தை மூடிக்கொள்கிறேன்.
யாராவது அடிப்பார்கள் என சாரதியிடம் கூறியுள்ளேன். சீக்கிரம் அவ்விடத்தை விட்டு செல்வோம். இல்லை என்றால் அப்படியொரு நிலை உருவாகும்.
இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர். நானும் 12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன் ஆனால் தற்போது விரக்தி மாத்திரமே மீதமாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan