கல்கிஸ்சையில் சிக்கிய பெண் - அதிசொகுசு மாளிகை வீடு அரசினால் பறிமுதல்
கொழும்பின் புறுநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் ஐஸ் போதை வைத்திருந்ததற்காக இரத்மலானையை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சந்தேக நபரால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில், நேற்று மாலை கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீட்டை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வீடு சுற்றிவளைப்பு
அதற்கமைய, சந்தேக நபரின் வீட்டில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து ஒரு தொகை பொருட்கள் கிடைத்துள்ளது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டிலிருந்து 10 கிராம் 260 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 800,000 ரூபாய் பணம் ஒரு துப்பாக்கி, வெடிமருந்துகள், 8 போலி மோட்டார் சைக்கிள் உரிமத் தகடுகள், 4 போலி முச்சக்கர வண்டி உரிமத் தகடுகள், 18 போலி கார் உரிமத் தகடுகள், ஒரு மின்னணு தராசு, 2 தங்க சங்கிலிகள், ஒரு தங்க வளையல் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேவேளை, அவிசாவளையில் நபர் ஒருவருக்கு சொந்தமான சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, மேற்கொண்ட விசாரணையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவிசாவளை மேல் தல்துவ பகுதியில் அமைந்துள்ள 20 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள இரண்டு மாடி சொகுசு மாளிக்கை முடக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள்
9 ஏக்கரில் அமைந்துள்ள குறித்த வீடு, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று முதல் 7 நாட்களுக்கு முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.