அடுத்த 10 நாட்களில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: முதலீடு செய்பவர்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
உலக சந்தையில் தங்க விலை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,அடுத்த வாரம் வெளியாக உள்ள அமெரிக்க பணவீக்க தரவுகள் மற்றும் பொருளாதார முடிவுகள் தங்கத்தின் விலையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தங்க சந்தையில் அடுத்த 10 நாட்கள் முக்கியம் என்றும் கூறப்படுகின்றது சர்வதேச சந்தையில் (Comex), தங்கம் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு அவுன்ஸ் $234.70 (சுமார் 5%) அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் $4,400 என்ற குறைந்த விலைக்குச் சென்ற தங்கம், தற்போது மீண்டும் $5,000 என்ற நிலையை எட்டியுள்ளது.
வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் சற்று எச்சரிக்கை
சமீபத்தில் தங்கம் விலை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்த நிலையில், அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்ந்தது மற்றும் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளில் மாற்றம் ஏற்பட்டதே இந்த சரிவுக்குக் காரணமாக கூறப்படுகின்றது.

தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை இன்னும் அழுத்தத்திலேயே உள்ளதுடன், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2.08% குறைந்துள்ளது.
ஜனவரி மாத இறுதியில் வெள்ளி விலை மிக உயர்ந்த நிலையில் இருந்து திடீரென சரிவைச் சந்தித்தது.
இந்த ஏற்ற இறக்கங்கள் இன்னும் சில காலம் தொடரலாம் என்பதால், வெள்ளியில் முதலீடு செய்பவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார சூழல்கள் காரணமாக தற்போது தங்கத்தின் மீதான ஆர்வம் குறையாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இலங்கையில் தங்கத்தின் விலை
அந்த வகையில், இலங்கையில் தங்கத்தின் விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன்,இதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,900ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 கரட் தங்கம் பவுண் ஒன்று 354,300 ரூபாயாக, விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.